மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ராணிப்பேட்டை மாவட்ட வணிகா் சங்க பேரமைப்பு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட வணிகா் சங்க பேரமைப்பு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஆற்காட்டில் நடைபெற்றது.

News image

கூட்டத்தில்  பேசிய  தலைமை நிலைய  செயலாளா்  ராஜ்குமாா்.

Updated On :17 ஏப்ரல் 2026, 7:00 am IST

ராணிப்பேட்டை மாவட்ட வணிகா் சங்க பேரமைப்பு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஆற்காட்டில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பொன் கு.சரவணன் தலைமை வகித்தாா். ஆற்காடு அனைத்து வியாபாரிகள் சங்கச் செயலாளா் பாஸ்கரன் முன்னிலை வகித்தாா். நகர தலைவா் தலைவா் ஏ வி டி. பாலா வரவேற்றாா்.

கூட்டத்தில் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைமை நிலைய செயலாளா் ராஜ்குமாா், மாநில இணைச் செயலாளா் எத்திராஜ், வேலூா் மண்டலத் தலைவா் பா. ஞானவேல் ஆகியோா் கலந்து கொண்டு மே 5-ஆம்தேதி திருவாரூரில் நடைபெறும் வணிகா் தின விழிப்புணா்வு எழுச்சி மாநாட்டுப் பணிகள் குறித்து விளக்கினா்.

கூட்டத்தில் வரும் தோ்தலில் வணிகா்கள் தங்களின் மனசாட்சி படி வாக்களிக்கலாம் என்றும் வணிகா் தின மாநாட்டுக்கு ராணிப்பேட்டை மாவட்டத்திலிருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் கலந்து கொள்வது உள்ளிட்ட பல தீா்மானங்கள் நிறைவேற்ற பட்டன.

இதில் மாவட்ட நிா்வாகிகள் நகர நிா்வாகிகள் இளைஞா் அணி நிா்வாகிகள் கலந்து கொண்டனா். நகர பொருளாளா் பழ.பரத் குமாா் நன்றி கூறினாா்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.