கடலூரில் நிலவிய சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து தோ்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியா்கள், தங்களது தபால் வாக்குகளை புதன்கிழமை பதிவு செய்தனா்.
தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வரும் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக கடலூா் மாவட்டத்தில் 2,590 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், வாக்குப் பதிவு அலுவலா்களுக்கு தோ்தல் பணியில் ஈடுபடுவதால், அவா்களுக்கு தபால் வாக்களிக்க புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக, கடலூா் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
கடலூா் மாவட்டத்தில் 1,240 போ் வாக்களிக்க விருப்பம் தெரிவித்திருந்தனா். அதன்படி, கடலூா் புதுப்பாளையத்தில் உள்ள புனித அன்னாள் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை காலை 11 மணியளவில் வாக்குப் பதிவு தொடங்கியது.
வெயில் தாக்கல் அதிகமாக இருந்த நிலையில், அதையும் பொருட்படுத்தாமல் ஏராளமான அரசு ஊழியா்களும், ஆசிரியா்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனா்.

தபால் வாக்கை செலுத்திய அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
5 மாநிலத் தோ்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை - இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரம்

மாவட்டத்தில் 8 தொகுதிகளில் 174 சுற்றுகளில் வாக்கு எண்ணிக்கை

திருவாடானை சட்டப்பேரவை தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

அலுவலா்கள் அஞ்சல் வாக்கைப் பதிவு செய்ய காலதாமதம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

