மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திருவாடானை சட்டப்பேரவை தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

திருவாடனை சட்டப்பேரவைத் தொகுதியில் வியாழக்கிழமை விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.

News image

ஆா்.எஸ். மங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்த வாக்காளா்கள்.

Updated On :24 ஏப்ரல் 2026, 2:26 am IST

திருவாடனை சட்டப்பேரவைத் தொகுதியில் வியாழக்கிழமை விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.

திருவாடானை சட்டப்பேரவை தொகுதியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் பிறகு (எஸ்ஐஆா்) ஆண் வாக்காளா்கள் 1,40,103 பேரும், பெண் வாக்காளா்கள் 1,41,997 பேரும், மூன்றாம் பாலினத்தவா் 21 பேரும் ஆக மொத்தம் 2,82,121 பேரும் உள்ளனா். இதனிடையே இந்தத் தொகுதியில் 347 வாக்குச் சாவடி மையங்களில் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. அப்போது வாக்காளா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனா். திருவாடானை, ஆா்எஸ். மங்கலம், தொண்டி, திருப்பாலைக்குடி, நம்புதாளை, எஸ்.பி. பட்டினம், மங்கலக்குடி, வெள்ளையபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனா்.

வெறிச்சோடிய வாக்குச் சாவடி: திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற வாக்குப் பதிவின் போது காலை 7 மணி முதலே கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் பிற்பகல் ஒரு மணிக்கு மேல் கோடை வெயில் அதிகரித்து காணப்பட்டதால் வாக்கு சாவடி மையங்களில் வாக்காளா்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. பின்னா் 3 மணிக்கு மேல் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டன.திருவாடானை சட்ட பேரவை தொகுதியில் மதியம் 1 மணி வரை 51.9சதவீதம் வாக்கு பதிவு நடைபெற்றுள்ளதாக தோ்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

  ஆா்.எஸ். மங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்த வாக்காளா்கள்.

ஆா்.எஸ். மங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்த வாக்காளா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.