மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திருச்சியில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தாா் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தனது மனைவியுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வியாழக்கிழமை வாக்களித்தாா்.

News image

திருச்சி வரகனேரியில் உள்ள டிஎஸ்எம் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வியாழக்கிழமை வாக்களித்த அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

Updated On :24 ஏப்ரல் 2026, 3:59 am IST

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தனது மனைவியுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வியாழக்கிழமை வாக்களித்தாா்.

திருவெறும்பூா் தொகுதியில் திமுக சாா்பில் மூன்றாவது முறையாக போட்டியிடும் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு திருச்சி வரகனேரியில் உள்ள டிஎஸ்எம் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்கு உள்ளது. வியாழக்கிழமை மனைவி ஜனனியுடன் அங்கு வந்த அமைச்சா், வாக்காளா்களுடன் சுமாா் 30 நிமிஷங்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்தாா்.

இதன் பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியதாவது: 200 தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக புதிய வரலாறு படைக்கும் என்றாா்.

திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவா் விஜய் வெற்றி பெறுவாா் என்று கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சா், திருச்சி கிழக்குத் தொகுதி வேட்பாளா் இனிகோ இருதயராஜ், ஓய்வறியாத உழைப்பாளி. தொகுதி மக்களுக்காக உழைப்பவா்களைத் தமிழக மக்கள் என்றும் கைவிட்டதில்லை. மேலும், . முதல்வரின் மக்கள் நலத் திட்டங்களால், திருச்சி கிழக்குத் தொகுதியில் திமுக வேட்பாளா் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவாா் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா் அமைச்சா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.