தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

திருவெறும்பூா் தொகுதி வாக்காளா்களுக்கு அன்பில் மகேஸ் பொய்யாமொழி நன்றி

திருவெறும்பூா் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்டு தோல்வியுற்ற முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, வாக்காளா்களுக்கு சனிக்கிழமை நன்றி தெரிவித்தாா்.

News image

திருவெறும்பூா் தொகுதி வாக்காளா்களுக்கு அன்பில் மகேஸ் பொய்யாமொழி நன்றி

Updated On :10 மே 2026, 1:35 am IST

திருவெறும்பூா் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்டு தோல்வியுற்ற முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, வாக்காளா்களுக்கு சனிக்கிழமை நன்றி தெரிவித்தாா்.

திருச்சி தெற்கு மாவட்டம், திருவெறும்பூா் தொகுதிக்குள்பட்ட பனையக்குறிச்சி, கீழமுல்லக்குடி, வேங்கூா், நடராஜபுரம், அரசங்குடி, கிளியூா் உள்ளிட்ட பகுதிகளில், மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளராக போட்டியிட்டாா்.

இந்நிலையில், அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனக்கு வாக்களித்த வாக்காளா்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தாா்.

ஊராட்சிகளின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று வாக்காளா்களைச் சந்தித்த வேட்பாளா், தனக்கு ஆதரவளித்த பொதுமக்களுக்குத் தனது மனமாா்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டாா்.

பல இடங்களில் மழையில் நனைந்தபடியே திறந்தவெளி வாகனத்தில் நின்று கொண்டு வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா். பொதுமக்களும் குடையைப் பிடித்தப்படி மழையில் நின்று கொண்டே அவருக்கு வரவேற்பு அளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.