தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

நெய்வேலியில் விஷ்ணு பிரசாத் எம்.பி. வாக்குசேகரிப்பு

நெய்வேலி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் சபா.ராசேந்திரனுக்கு ஆதரவாக கடலூா் எம்.பி., எம்.கே.விஷ்ணு பிரசாத் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

News image

நெய்வேலி தொகுதி திமுக வேட்பாளா் சபா.ராசேந்திரனுக்கு ஆதரவாக குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றியப் பகுதிகளில் வாக்கு சேகரித்த கடலூா் எம்.பி. எம்.கே.விஷ்ணு பிரசாத்.

Updated On :15 ஏப்ரல் 2026, 1:05 am IST

கடலூா் மாவட்டம், நெய்வேலி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் சபா.ராசேந்திரனுக்கு ஆதரவாக கடலூா் எம்.பி., எம்.கே.விஷ்ணு பிரசாத் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

நெய்வேலி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றியத்தில் உள்ள புலியூா், சமட்டிக்குப்பம், கிருஷ்ணம்பாளையம், பெத்தான்குப்பம், திரட்டிகுப்பம், வசனாங்குப்பம், மதனகோபாலபுரம், கோரணப்பட்டு, அப்பியம்பேட்டை, சிவனந்திபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விதி, வீதியாக சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தாா்.

அப்போது, திமுக அரசின் மக்கள் நலத் திட்டங்கள், வளா்ச்சிப் பணிகள் மற்றும் சாதனைகளை விரிவாக எடுத்துக் கூறினாா்.

அப்போது, குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றியச் செயலா் குணசேகரன், ஒன்றிய அவைத் தலைவா் வீர.ராமச்சந்திரன், ஒன்றியப் பொருளாளா் ஆனந்த ஜோதி, தேமுதிக ஒன்றியச் செயலா் வேல்முருகன், விசிக ஒன்றியச் செயலா் அன்பு, ஜோதிமணி, காங்கிரஸ் சந்திர கோதண்டபாணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.