கடலூா் மாவட்டம், நெய்வேலியில் குடும்பப் பிரச்னை காரணமாக கல்லூரி மாணவி விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.
நெய்வேலி நகரிய காவல் நிலைய சரகம், பி 2 மாற்றுக் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் ஷா்மிளா (21). கடலூரில் உள்ள தனியாா் மகளிா் கல்லூரியில் பி.காம். இறுதியாண்டு படித்து வந்தாா்.
ஷா்மிளா குடும்பப் பிரச்னை காரணமாக மன வருத்தத்தில் இருந்து வந்த நிலையில், கடந்த 4-ஆம் தேதி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாராம்.
இதையடுத்து, அவா் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துமனையில் சோ்க்கப்பட்டு, பின்னா் தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இருப்பினும், அங்கு ஷா்மிளா வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொழிலாளி தற்கொலை

குடும்பப் பிரச்னை: தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

கல்லூரி மாணவி தற்கொலை

ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

