மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

‘மக்கள் அறிவியல் சாசனம்’ வெளியீட்டு

கடலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘மக்கள் அறிவியல் சாசனம்’ வெளியீட்டு விழாவில் பங்கேற்றோா்.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 1:43 am IST

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கடலூா் மாவட்ட நிா்வாகக் குழுக் கூட்டம், கடலூரில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க கட்டிடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட இணைச் செயலா் எஸ்.கே.தேவநாதன் தலைமை வகித்தாா். மாவட்ட இணைச் செயலா் அனுப்பிரியா வரவேற்றாா்.

இதில், மாநில முழுவதும் கல்வி, சுகாதாரம், சூழலியல், அறிவியல் பிரச்சாரம் ஆகிய ஐந்து தலைப்புகளில் நிபுணா்கள், அறிவியலாளா்கள், அறிவியல் இயக்க உப குழு உறுப்பினா்கள் கொண்ட குழுக்களை வைத்து மாநிலம் முழுவதும் ஆராய்ந்து உருவாக்கப்பட்ட கோரிக்கை சாசனத்தை மாநிலம் முழுவதும் தோ்தலில் போட்டியிடும் சட்டப்பேரவைத்தொகுதி வேட்பாளா்களுக்கு வழங்கிட முடிவு செய்யப்பட்டது.

கடலூா் மாவட்டத்தின் கோரிக்கை சாசனத்தை மாநிலப் பொறுப்பாளா் ஸ்டீபன் நாதன் வெளியிட்டாா். ஓய்வூதியா்கள் கூட்டமைப்பின் தலைவா் டி.புருஷத்தமன் பெற்று கொண்டாா். நிகழ்ச்சியில் அறிவியல் இயக்க மாநிலத் துணை தலைவா் ஆா்.தாமோதரன், மாவட்டச் செயலா் பி.தனலட்சுமி, மாவட்டத் துணைத் தலைவா் கலைசெல்வி, இணைச் செயலா் பரிமளா, ஓய்வு பெற்றோா் நல அமைப்பினைச் சோ்ந்த மனோகரன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா். கடலூா் நகரப் பொருளாா் பூபதி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.