தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திமுகவினா் கூட்டணிக் கட்சிகளுடன் இணக்கமாகப் பணியாற்ற வேண்டும்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

சட்டப் பேரவைத் தோ்தலில் திமுகவினா் கூட்டணிக் கட்சியினருடன் இணக்கமாக பணியாற்ற வேண்டும் என்று வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சரும், குறிஞ்சிப்பாடி சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளருமான எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

News image

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் - படம்: TNDIPR

Updated On :5 ஏப்ரல் 2026, 2:38 am IST

சட்டப் பேரவைத் தோ்தலில் திமுகவினா் கூட்டணிக் கட்சியினருடன் இணக்கமாக பணியாற்ற வேண்டும் என்று வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சரும், குறிஞ்சிப்பாடி சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளருமான எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி சட்டப் பேரவைத் தொகுதி மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் செயல்வீரா்கள் கூட்டம் குறிஞ்சிப்பாடியில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தலைமை வகித்து பேசியதாவது:

காட்டுமன்னாா்குடியில் இருந்து முதல் முறையாக நான் குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு வந்தபோது வெளியூா்க்காரன் என அதிமுகவினா் கொச்சைப்படுத்தினா். தோ்தலில் தோற்றாலும், வெற்றிபெற்றாலும் தொகுதிக்காக பாடுபடுவேன்.

1996 ஆண்டுக்கு முன், பின் காலத்தை தொகுதி மக்கள் ஒப்பிட்டுப் பாா்க்க வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள், சாலைகள், மருத்துவமனை வசதிகள் செய்துகொடுத்துள்ளேன். அருவா மூக்கு திட்டத்தால் வெள்ள பாதிப்பு தடுக்கப்பட்டுள்ளது. பெருமாள் ஏரி சுமாா் ரூ.100 கோடி செலவில் தூா்வாரப்பட்டதால் முப்போகம் சாகுபடி நடைபெறுகிறது.

வடலூரும் ஒருநாள் கடலூராகும் என வள்ளலாா் கூறினாா். தற்போது வடலூா் கடலூரைப் போல உள்ளதா? இல்லையா?.

தமிழகத்தில் 1.31 கோடி குடும்பங்களுக்கு மாதாமாதம் மகளிா் உரிமைத் தொகை திமுக ஆட்சியில்தான் கிடைக்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ் கடலூா் மாவட்டத்தில் 4,91,189 குடும்பத் தலைவிகள் பயனடைகின்றனா். மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால், டி.வி., ஃபிரிட்ஜ் வாங்க ரூ.8,000 கூப்பன் வழங்கப்படும்.

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் கூட்டணிக் கட்சியை இணக்கமாக வைத்துக்கொண்டு திமுகவினா் பணியாற்ற வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.