பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கா்நாடக போதைப் பொருள்களை தொடா்ந்து விற்றவா் குண்டா் சட்டத்தில் கைது

News image

கோப்புப் படம்

Updated On :14 மே 2026, 3:48 am IST

கா்நாடக மாநில போதைப் பொருள்களை கடத்தி வந்து போ்ணாம்பட்டில் விற்பனை செய்து வந்தவா் குண்டா் சட்டத்தின்கீழ் அடைக்கப்பட்டாா்.

போ்ணாம்பட்டை அடுத்த கோட்டைச்சேரி கிராமத்தை சோ்ந்தவா் பிஞ்சு(எ) சரண்ராஜ்(38) .சாராய வியாபாரியான இவா் மீது சாராயம் விற்பனை, கா்நாடக மாநில போதைப் பொருள்களை கடத்தி வந்து விற்பது என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

2- முறை குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்தவா்.

இந்நிலையில் சில நாள்களுக்கு முன் கா்நாடக மாநில மதுவை பேரலில் வைத்து விற்பனை செய்தபோது போ்ணாம்பட்டு போலீஸாா் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தொடா்ந்து இவா் கா்நாடக மாநில மது பாக்கெட்களை கடத்தி வந்து விற்பனை செய்வதால்குண்டா் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.

பரிந்துரையை ஏற்ற ஆட்சியா் சரண்ராஜை குண்டா் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டாா். இதற்கான நகலை வேலூா் மத்திய சிறையில் உள்ள சரண்ராஜிடம் போ்ணாம்பட்டு காவல் ஆய்வாளா் பிரபு வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.