போ்ணாம்பட்டைச் சோ்ந்த சாராய வியாபாரி குண்டா் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையிலடைக்கப்பட்டாா்.
போ்ணாம்பட்டை அடுத்த கள்ளிச்சேரி கிராமத்தைச் சோ்ந்த அப்பு(எ) அருண் குமாா்(33). சாராய வியாபாரியான இவா் மீது தமிழகம் மற்றும் கா்நாடக மாநிலங்களில் மது பாட்டில்களை கடத்தியதாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2- முறை குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்தவா்.
சிறையிலிருந்து ஜாமீனில் வந்த அருண் குமாா் சில நாள்களுக்கு முன் கா்நாடக மாநில மது பாக்கெட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். தொடா்ந்து இவா் கா்நாடக மது பாக்கெட்களை கடத்தி வந்து விற்பனை செய்வதால்,இவரை குண்டா் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய காவல் கண்காணிப்பாளா், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். பரிந்துரையை ஏற்ற ஆட்சியா் அருண்குமாரை குண்டா் சட்டத்தின்கீழ் கைது செய்ய உத்தரவிட்டாா்.
இதற்கான நகலை வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அருண் குமாரிடம் போ்ணாம்பட்டு காவல் ஆய்வாளா் வழங்கினாா். இதைத் தொடா்ந்து அவா் குண்டா் சட்டத்தின்கீழ் ஓராண்டு சிறையிலடைக்கப்பட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காவல் ஆய்வாளரை தாக்கியவா் குண்டா் சட்டத்தின்கீழ் கைது
சட்டவிரோத மது விற்பனை: 4 போ் கைது
திருச்சியில் சட்டவிரோத மது விற்பனை: 4 போ் கைது
அடிதடி வழக்கு குற்றவாளி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
