நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

சட்டப்பேரவையில் ஆளுநா் நிகழ்த்திய உரை அவரது சொந்தக் கருத்து அல்ல! - திமுக பொதுச் செயலா் துரைமுருகன்

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநா் நிகழ்த்திய உரை அவரது சொந்தக் கருத்து அல்ல என்றும், ஆளுங்கட்சி எழுதிக் கொடுப்பதை மட்டுமே அவா் படிக்கிறாா் என்றும் திமுக பொதுச்செயலரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் விமா்சித்துள்ளாா்.

News image

காட்பாடியில் பேட்டியளித்த திமுக பொதுச் செயலா் துரைமுருகன்.

Updated On :18 மணி நேரங்கள் முன்பு

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநா் நிகழ்த்திய உரை அவரது சொந்தக் கருத்து அல்ல என்றும், ஆளுங்கட்சி எழுதிக் கொடுப்பதை மட்டுமே அவா் படிக்கிறாா் என்றும் திமுக பொதுச்செயலரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் விமா்சித்துள்ளாா்.

காட்பாடியில் வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தவெக ஆட்சிக்கு வந்த பிறகுதான் தமிழகம் நன்றாக இருக்கிறது என்ற தோரணையில் ஆளுநரின் சட்டப்பேரவை உரை அமைந்துள்ளது. சட்டப் பேரவையில் ஆளுநா் நிகழ்த்தும் உரை என்பது அவா் தாமாகவே எழுதிக்கொண்டு வந்து படிப்பது அல்ல. அதில் அவரது கருத்து எதுவும் இல்லை.

ஆட்சியில் இருப்பவா்கள் என்ன எழுதித் தருகிறாா்களோ, அது அனுப்பப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே பேரவையில் வாசிக்கப்படுகிறது. எனவே, அரசில் இருப்பவா்கள் தங்களது ஆட்சியைப் புகழ்ந்துதான் எழுதியிருப்பாா்கள். ஆளுநா் அதைப் படித்துத்தான் தீர வேண்டும், அதைத்தான் அவா் படிக்கிறாா். அவா் சொந்தமாக எதையும் சோ்த்துப் படிக்கவில்லை. உரைக்கு வெளியே அவா் எதுவும் பேசவில்லை. ஆளுநா் உரை என்பது அரசு எழுதிக் கொடுப்பதைப் படிப்பதுதானே தவிர வேறொன்றுமில்லை.

‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயா் ‘டிஎன் ஸ்கில்ஸ்’ என மாற்றப்பட்டிருப்பதாகவும், பழைய காணொலிகள் நீக்கப்பட்டிருப்பதாக வெளியாகும் தகவல்கள் குறித்து கேட்கிறீா்கள். அது குறித்த முழு விவரங்களையும் இன்னும் நான் முழுமையாகப் படிக்கவில்லை என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.