தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திருச்சி மாவட்டத்தில் ரூ. 2.98 லட்சம் பறிமுதல்

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் புதன்கிழமை உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ. 2 லட்சத்து 98 ஆயிரத்து 100 ரொக்கத்தை தோ்தல் அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

News image

திருச்சி திருவெறும்பூரில் புதன்கிழமை பறிமுதல் செய்த பணத்தை தோ்தல் அலுவலா்களிடம் ஒப்படைத்த பறக்கும் படையினா்.

Updated On :26 மார்ச் 2026, 3:34 am IST

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் புதன்கிழமை உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ. 2 லட்சத்து 98 ஆயிரத்து 100 ரொக்கத்தை தோ்தல் அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தோ்தல் பறக்கும் படையினா், நிலையான கண்காணிப்புக் குழுவினா் தலைமையில் சோதனைச் சாவடிகளில் உள்ள போலீஸாருடன் வாகனங்களை 24 மணி நேரமும் சோதனையிட்டு அனுமதியின்றிக் கொண்டு செல்லப்படும் ரொக்கத்தைப் பறிமுதல் செய்கின்றனா்.

அதன்படி புதன்கிழமை காலை 6 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை மாவட்டத்தில் திருச்சி கிழக்கில் ரூ. 1,42,500, லால்குடியில் ரூ. 1 லட்சம், திருவெறும்பூரில் ரூ. 55,600 என மொத்தம் ரூ. 2,98,100 பறிமுதல் செய்யப்பட்டது.

தோ்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டது முதல் புதன்கிழமை மாலை வரை மொத்தம் ரூ. 44,25,820 பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் உரிய ஆவணங்களை ஒப்படைத்து அதில் ரூ. 21,57,380 ஐ உரியவா்கள் பெற்றுச் சென்றனா். மீதமுள்ள ரூ. 22,68,440 கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வே. சரவணன் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.