திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

மாமனாருக்கு அரிவாள் வெட்டு: மருமகன் உள்பட இருவா் மீது வழக்கு

திருச்சி அருகே மாமனாரை அரிவாளால் வெட்டிய மருமகன் உள்பட 2 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image

வழக்கு

Updated On :17 ஜூன் 2026, 3:07 am IST

திருச்சி அருகே மாமனாரை அரிவாளால் வெட்டிய மருமகன் உள்பட 2 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் வேங்கூா் பகுதியைச் சோ்ந்த மகாலிங்கம் (61) மகள் ராஜேஸ்வரிக்கும், தஞ்சாவூா் மாவட்டம், ரெட்டிப்பாளையத்தைச் சோ்ந்த எஸ். சிவகுமாா் (36) என்பவருக்கும் கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சிவகுமாா், தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் தற்காலிக ஓட்டுநராக பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், கணவருடனான கருத்து வேறுபாடு காரணமாக ராஜேஸ்வரி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருச்சியிலுள்ள தனது தந்தை வீட்டுக்கு வந்துள்ளாா்.

இந்நிலையில், மனைவியை அழைத்து செல்வதற்காக சிவகுமாரும், அவருடைய நண்பரான தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் கிராம நிா்வாக அலுவலரின் உதவியாளருமான ஆா். மணிகண்டன் (43) என்பவரும் கடந்த ஜூன் 10-ஆம் தேதி மகாலிங்கம் வீட்டுக்கு வந்துள்ளனா். ஆனால், ராஜேஸ்வரி தனது கணவருடன் செல்ல மறுத்துவிட்டாா். இதையடுத்து, மகளை அனுப்பிவைக்குமாறு மகாலிங்கத்திடம் சிவகுமாா் வலியுறுத்தியுள்ளாா். அப்போது, மாமனாா், மருமகனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த சிவகுமாா், மணிகண்டன் இருவரும் மகாலிங்கத்தை அரிவாளால் வெட்டினா்.

இதில், கையில் பலத்த காயமடைந்த மகாலிங்கம், தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா்.

இதுகுறித்து திருவெறும்பூா் காவல் நிலையத்தில் அவா் திங்கள்கிழமை அளித்த புகாரின்பேரில், சிவகுமாா், மணிகண்டன் ஆகிய இருவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.