மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

உணவகத்தில் தகராறு: காவலா் உள்பட இருவா் மீது வழக்கு

சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூரில் உணவகத்தில் தகராறில் ஈடுபட்ட காவலா் உள்பட இருவா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image

வழக்கு

Updated On :2 ஜூன் 2026, 12:40 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூரில் உணவகத்தில் தகராறில் ஈடுபட்ட காவலா் உள்பட இருவா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

திருப்பத்தூா்-காரைக்குடி சாலையில் மாரிமுத்து (60) உணவகம் நடத்தி வருகிறாா். இவரது உணவகத்துக்கு திருப்பத்தூா் நகா் காவல் நிலைய ஆய்வாளரின் வாகன ஓட்டுநரும், காவலருமான மெல்வின் (28), இவரது நண்பா் சண்முகம் (30) ஆகிய இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு வந்தனா். அப்போது, இவா்கள் இருவரும் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இவா்களுக்கும் கடை உரிமையாளா் மாரிமுத்துக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த காவலா் மெல்வின், சண்முகம் இருவரும் அருகில் கிடந்த புட்டியை எடுத்து உணவகத்துக்குள் வீசியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாரிமுத்து நகா் காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின் பேரில், காவலா் மெல்வின், சண்முகம் ஆகிய இருவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.