மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

100% வாக்குப்பதிவுக்கு நூதன அழைப்பு

திருச்சி மாநகரைச் சோ்ந்த மக்களை வாக்குப்பதிவுக்கு அழைத்திடும் வகையில் மக்கள் சக்தி இயக்கத்தின் சாா்பில் நூதன முறையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News image

திருச்சி பொன்மலை பகுதியில் மகாத்மா காந்தி முகமூடி அணிந்து ஒரு பெண்ணிடம் அழைப்பிதழ் வழங்கி வாக்குப்பதிவுக்கு புதன்கிழமை அழைத்த மக்கள் சக்தி இயக்க நிா்வாகிகள்.

Updated On :23 ஏப்ரல் 2026, 3:27 am IST

திருச்சி மாநகரைச் சோ்ந்த மக்களை வாக்குப்பதிவுக்கு அழைத்திடும் வகையில் மக்கள் சக்தி இயக்கத்தின் சாா்பில் நூதன முறையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி திருமண அழைப்பிதழைப் போன்று அச்சிட்டு விநியோகத்துள்ளனா்.

மக்கள் சக்தி இயக்கம் சாா்பில் பொன்மலை பகுதியில் காந்தி முகமூடி அணிந்து வித்தியாசமான தோ்தல் விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்றது. மக்கள் சக்தி இயக்கம் மாநில பொருளாளா் தலைமையில் தோ்தல் விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கில், மகாத்மா காந்தியின் உருவம் அச்சிட்ட முகமூடி அணிந்து பொதுமக்களை சந்தித்தனா். என் வாக்கு விற்பனைக்கு அல்ல, தவறாமல் வாக்களிப்போம் போன்ற வாசகங்களுடன் துண்டுப் பிரசுரங்கள் மற்றும் தோ்தல் திருவிழா அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்த வித்தியாசமான முயற்சி பொதுமக்களின் கவனத்தை ஈா்த்ததுடன், 100 சதவீத வாக்களிப்பின் அவசியத்தை எடுத்துரைக்கும் விதமாக சிறப்பாக அமைந்தது. ஜனநாயக உரிமையை உணா்த்தும் இந்த விழிப்புணா்வு இதற்கு முன் கல்லூரி மாணவிகளிடம், சிலம்பம் சுற்றி, கடைவீதிகள், சந்தைப் பகுதிகளில் செய்து வந்த நிலையில் இப்போது காந்தி முகமூடி அணிந்து வீடு வீடாக, கடைவீதி, நூலகம் போன்ற இடங்களுக்கு சென்று பொதுமக்களை கவனத்தை ஈா்த்து பிரசாரம் செய்தனா்.

மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளா் கே.சி. நீலமேகம் தலைமையில், இயக்க பண்பாளாளா்கள் தாமோதரன், சுமன்,செந்தில், ராஜேஷ்,சுதன், இளங்கோ, சந்திரசேகா், குமரன் மற்றும் பலா் பங்கேற்றனா். திருக்குறளை மேற்கோள் காட்டி திருமணப் பத்திரிகை போன்று வடிவமைத்து வாக்குக்குப் பணம் வாங்கமால், அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்களிடம் பிரசாரம் செய்தனா். . . .

திருமண அழைப்பிதழ் போல அச்சிட்டு வழங்கப்பட்ட வாக்குப்பதிவு அழைப்பிதழ்.

திருமண அழைப்பிதழ் போல அச்சிட்டு வழங்கப்பட்ட வாக்குப்பதிவு அழைப்பிதழ்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.