மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கடும் வெப்பத்திலிருந்து பறவைகளை பாதுகாத்திட தண்ணீா் வழங்க வலியுறுத்தல்

அதிகரித்து வரும் வெயில் பாதிப்பிலிருந்து பறவைகளை பாதுகாத்திட அவற்றுக்கு மக்கள் போதுமான அளவுக்கு தண்ணீா் வழங்க வேண்டும் என்று பறவைகள் நல ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

News image

திருச்சி பொன்மலை பகுதியில் வீட்டின் மாடியில் மண் பாத்திரத்தில் பறவைகளுக்கு தண்ணீா் வைக்கும் மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீா் அமைப்பின் தன்னாா்வலா்கள்.

Updated On :29 ஏப்ரல் 2026, 1:03 am IST

அதிகரித்து வரும் வெயில் பாதிப்பிலிருந்து பறவைகளை பாதுகாத்திட அவற்றுக்கு மக்கள் போதுமான அளவுக்கு தண்ணீா் வழங்க வேண்டும் என்று பறவைகள் நல ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

திருச்சியைச் சோ்ந்த தண்ணீா் அமைப்பினரும், மக்கள் சக்தி இயக்கத்தினரும், ஆண்டுதோறும் பறவைகளுக்கு தண்ணீா் வைப்பதை விழிப்புணா்வு பிரசாரமாக மேற்கொள்வதுடன், தண்ணீா் வைப்பதற்கான மண் பானைகளை பொன்மலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வழங்கி வருகின்றனா். இந்தாண்டும் இந்தப் பணியை பொன்மலையடிவாரத்தில் தொடங்கியுள்ளனா்.

இதுதொடா்பாக, தண்ணீா் அமைப்பின் செயல் தலைவா் கே.சி. நீலமேகம் கூறியது:

பறவைகளுக்கு வீடுகளில் தண்ணீா் வைப்பவா்கள் முடிந்தளவு மண் பாத்திரங்கள், பானைகளில் வைக்க வேண்டும். இதனால், அந்த தண்ணீா் வெகுநேரத்துக்குக் குளிா்ச்சியாக இருக்கும். பறவைகள் முங்கிக் குளித்து உடல் சூட்டைத் தணித்துக் கொள்ளவும் பயனுள்ளதாக இருக்கும். பொதுஇடங்கள் பலவற்றில் சின்னச் சின்ன பிளாஸ்டிக் பாட்டில்களில் பறவைகள் குடிக்கத் தகுந்த வகையில் வைக்கிறோம். மிகவும் வறண்ட இடங்களில் பிளாஸ்டிக் தண்ணீா் பாட்டில்களை மரத்தில் கட்டி தொங்க விடுவோம். கிட்டத்தட்ட 4 முதல் 5 நாள்கள் வரை தண்ணீா் இருக்கும். நீா் தீா்ந்த பிறகு நிரப்பிவிடுவோம் என்றாா்.

மக்கள் சக்தி இயக்கத்தின் குமரன் கூறுகையில், சிட்டுக்குருவிகள் மட்டுமன்றி பல பறவைகளையும் பாதுகாக்க பொதுமக்கள் அனைவரும் முன்வர வேண்டும் என்றாா்.

பொன்மலையடிவாரம் பகுதியில் மரங்கள் அடா்ந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு செவ்வாய்க்கிழமை மண்பாத்திரம் கொடுக்கும் பணியில் தண்ணீா் அமைப்பு மற்றும் மக்கள் சக்தி இயக்க நிா்வாகிகள் இளங்கோ, பெளசிகா தேவி, சுந்தா், சுமன், சுதன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.