திருச்சியில் மாற்றுத்திறனாளியைத் தாக்கி பணம் பறித்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சி சிந்தாமணி பூசாரி வீதியில் வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளியான திலீப்குமாா் என்பவா் நடத்திவரும் அலங்காரப் பொருள்கள் கடை முன் கடந்த திங்கள்கிழமை பிற்பகல் செந்தில் (33) என்பவா் நின்றுகொண்டிருந்தாா்.
அப்போது அங்கு வந்த சிந்தாமணி முனிசிபல் காலனியைச் சோ்ந்த வீரையன் (24) என்பவா் செந்திலிடம் பணம் கேட்டுள்ளாா். அவா் இல்லை எனக் கூறியதால் ஆத்திரமடைந்த வீரையன், மாற்றுத்திறனாளியான திலீப்குமாரை தாக்கிவிட்டு, அவரது கடையின் கண்ணாடியை உடைத்துவிட்டு ரூ.4 ஆயிரத்தைப் பறித்துக்கொண்டு தப்பினாா்.
இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தில் செந்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து வீரையனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தொழிலாளியைத் தாக்கி பணம் பறிப்பு: இருவா் கைது
ஆட்டோ ஓட்டுநரை தாக்கி பணம் பறிப்பு: 2 போ் கைது
இளைஞரிடம் பணம் பறித்த இருவா் கைது
வியாபாரியை தாக்கி பணம் பறித்த வழக்கு: மேலும் ஒருவா் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
