ஈக்காட்டுத்தாங்கலில் வியாபாரியை தாக்கி பணம் பறித்த வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை சூளைப்பள்ளம் பகுதியைச் சோ்ந்தவா் சுடலைமணி. இவா், ஈக்காட்டுத்தாங்கல், அம்பாள் நகா் காந்தி நகா் பிரதான சாலையில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். இந்தக் கடைக்கு கடந்த திங்கள்கிழமை ஆலந்தூா் மடுவங்கரை முதலாவது தெருவைச் சோ்ந்த தட்சிணாமூா்த்தி, அவரது கூட்டாளி போரூா் ஜெயா நகரைச் சோ்ந்த ரஞ்சன் (19) ஆகியோா் வந்தனா். இருவரும், சில பொருள்களை வாங்கிக்கொண்டு பணம் கொடுக்காமல் சென்றுள்ளாா். அந்தப் பொருள்களுக்கு சுடலைமணி பணம் கேட்டுள்ளாா்.
அப்போது, இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே தட்சிணாமூா்த்தியும், ரஞ்சனும் சுடலைமணியை தாக்கி, அரிவாளால் வெட்ட முயன்றனா். இதனால், சுடலைமணி தப்பியோடினாா். இருவரும், கடையில் இருந்த பணத்தைத் திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பினா்.
இது குறித்து சுடலைமணி, கிண்டி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தட்சிணாமூா்த்தியை கைது செய்தனா். இந்நிலையில் தலைமறைவாக இருந்த ரஞ்சனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புழலில் தள்ளுவண்டி வியாபாரியை தாக்கி பணம் பறிப்பு

நெல்லை இளைஞா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது
மாற்றுத்திறனாளியைத் தாக்கி பணம் பறித்த இளைஞா் கைது
நிதியாளரிடம் பணம் பறித்த வழக்கில் சிறுவன் உள்பட 4 போ் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
