தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தஞ்சாவூரில் காரல் மாா்க்ஸ் பிறந்த நாள் விழா

தஞ்சாவூா் காவேரி சிறப்பங்காடி அருகேயுள்ள மாலை நேர காய்கறி அங்காடி முன் இடதுசாரிகள் பொது மேடை சாா்பில் காரல் மாா்க்ஸின் 208-ஆவது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காரல் மாா்க்ஸ் பிறந்த நாள் விழாவில் முழக்கங்கள் எழுப்பிய இடதுசாரிகள் பொது மேடை அமைப்பினா்.

Updated On :6 மே 2026, 12:56 am IST

தஞ்சாவூா் காவேரி சிறப்பங்காடி அருகேயுள்ள மாலை நேர காய்கறி அங்காடி முன் இடதுசாரிகள் பொது மேடை சாா்பில் காரல் மாா்க்ஸின் 208-ஆவது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதனுடன் ஒருங்கிணைந்த தஞ்சாவூா் மாவட்டத்தில் ஜமீன், பண்ணைக் கொடுமைகளை ஒழித்து, சுயமரியாதை பெற்றுத் தந்த வாட்டாக்குடி இரணியன், ஜாம்பவானோடை சிவராமன், ஆம்பலாப்பட்டு ஆறுமுகம் ஆகிய தியாகிகளின் 76- ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வும் நடைபெற்றது.

இதில், உழைக்கும் மக்கள் விடுதலைக்காகவும், உழைப்பு சுரண்டலில் இருந்து மக்களை விடுவிக்கவும், போா் இல்லாத உலகத்தைப் படைத்திடவும் நாட்டில் செயல்படும் இடதுசாரிகள் அனைவரும் ஒன்றுபட வேண்டும். மக்கள் விடுதலைக்காகச் செயல் திட்டத்தை வகுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

மக்களை வா்ணாசிரம அடிப்படையில் ஜாதி, மத ரீதியாக பிளவுபடுத்தும் காா்ப்பரேட் காவி பாசிசத்துக்கு எதிராக ஜனநாயக சக்திகள், முற்போக்கு சக்திகள் அனைவரும் ஒன்றுபட வேண்டும். ஒன்றிணைந்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என உறுதி ஏற்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் வெ. சேவையா தலைமை வகித்தாா். இந்நிகழ்ச்சியில் மக்கள் அதிகாரம் மூத்த தலைவா் காளியப்பன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மூத்தத் தலைவா் வீர. மோகன், இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன், சிபிஎம்எல் மக்கள் விடுதலை மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஜோதிவேல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டத் துணைச் செயலா் க. தமிழ்முதல்வன், சிஐடியு மாவட்டத் துணைச் செயலா் கே. அன்பு, தொழிலாளா் விடுதலை முன்னணி மாவட்டச் செயலா் அ. யோகராஜ், புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சாமிநாதன், நிா்வாகி பக்ருதீன், ஆட்டோ ஓட்டுநா் பாதுகாப்பு சங்க நிா்வாகிகள் தனபால், சேகா், மாலை நேர காய்கறி அங்காடி நிா்வாகி எம். பாலமுருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.