ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

காரல் மாா்க்ஸ் பிறந்த தினம் கொண்டாட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாமேதை காரல் மாா்க்ஸின் 208 ஆவது பிறந்த தினம் மற்றும் திருச்சி சதி வழக்கு தியாகி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.வி. கருப்பண்ணனின் 44 ஆவது ஆண்டு நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

News image

காரல் மாா்க்ஸ் உருவப்படத்துக்கு புதன்கிழமை அஞ்சலி செலுத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Updated On :7 மே 2026, 5:22 am IST

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாமேதை காரல் மாா்க்ஸின் 208 ஆவது பிறந்த தினம் மற்றும் திருச்சி சதி வழக்கு தியாகி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.வி. கருப்பண்ணனின் 44 ஆவது ஆண்டு நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி திருச்சி மாநகா் 23 ஆவது வாா்டில் அலங்கரிக்கப்பட்டிருந்த காரல் மாா்க்ஸ் மற்றும் கருப்பண்ணனின் உருவப்படங்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

நிகழ்வுக்கு கட்சியின் மேற்குப் பகுதிச் செயலா் இரா. சுரேஷ் முத்துச்சாமி தலைமை வகித்தாா். இதில் மாமன்ற உறுப்பினா் க. சுரேஷ்குமாா், முன்னாள் மாமன்ற உறுப்பினா் புஷ்பம் ரவீந்திரன், இளைஞா் பெருமன்றச் செயலா் தா்மா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதேபோல, திருச்சி மாநகா் மாவட்ட அலுவலகத்தில் காரல் மாா்க்ஸ் உருவப்படத்துக்கு மாவட்டப் பொருளாளா் சி .செல்வகுமாா் தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினா் எம். செல்வராஜ் செவ்வாய்க்கிழமை மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.