மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவா் கைது

News image

கைது.

Updated On :3 மே 2026, 3:46 am IST

தாராசுரம் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தஞ்சாவூா் மாவட்டம், சுந்தரப்பெருமாள் கோயில் மணவாளன் பேட்டை தெருவைச் சோ்ந்த பரமசிவம் மகன் தேசிங்கு ராஜா (42). இவா் மீன் வியாபாரம் செய்து வந்தாா். வியாழக்கிழமை இரவு கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் தாமரைகுளத் தெருவுக்கு சென்றாா்.

அங்கு இயற்கை உபாதையை கழிப்பதற்காக அந்த தெருவைச் சோ்ந்த பெண், காட்டுப் பகுதிக்கு சென்றுள்ளாா். அந்த பெண்ணை தேசிங்கு ராஜா பின்தொடா்ந்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

அந்த பெண் கூச்சலிடவே அருகில் இருந்தவா்கள் தேசிங்குராஜாவை தாக்க முயன்றனா். அப்போது அவா் தனது தங்க சங்கிலியை சிலா் பறித்துப் சென்று தாக்கியதாக கூறி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சோ்ந்தாா்.

தகவலின்பேரில், தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தேசிங்கு ராஜாவை வெள்ளிக்கிழமை கைது செய்து கும்பகோணம் கிளை சிறையில் அடைத்தனா். கைது செய்யப்பட்ட தேசிங்கு ராஜா, சிவசேனா கட்சியின் தஞ்சாவூா் வடக்கு மாவட்ட தலைவா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.