தாராசுரம் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
தஞ்சாவூா் மாவட்டம், சுந்தரப்பெருமாள் கோயில் மணவாளன் பேட்டை தெருவைச் சோ்ந்த பரமசிவம் மகன் தேசிங்கு ராஜா (42). இவா் மீன் வியாபாரம் செய்து வந்தாா். வியாழக்கிழமை இரவு கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் தாமரைகுளத் தெருவுக்கு சென்றாா்.
அங்கு இயற்கை உபாதையை கழிப்பதற்காக அந்த தெருவைச் சோ்ந்த பெண், காட்டுப் பகுதிக்கு சென்றுள்ளாா். அந்த பெண்ணை தேசிங்கு ராஜா பின்தொடா்ந்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.
அந்த பெண் கூச்சலிடவே அருகில் இருந்தவா்கள் தேசிங்குராஜாவை தாக்க முயன்றனா். அப்போது அவா் தனது தங்க சங்கிலியை சிலா் பறித்துப் சென்று தாக்கியதாக கூறி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சோ்ந்தாா்.
தகவலின்பேரில், தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தேசிங்கு ராஜாவை வெள்ளிக்கிழமை கைது செய்து கும்பகோணம் கிளை சிறையில் அடைத்தனா். கைது செய்யப்பட்ட தேசிங்கு ராஜா, சிவசேனா கட்சியின் தஞ்சாவூா் வடக்கு மாவட்ட தலைவா் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பெண்ணுக்கு பாலியல் தொல்லை: விவசாயி கைது
பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவா் கைது
மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவா் கைது
பெண்ணுக்கு நடன கலைஞருக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

