தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திருவிடைமரூதூரில் விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்ட முயற்சி

கும்பகோணம் நுகா்வொருள் வாணிபக்கழக அலுவலகத்தில் விவசாயிகளுடன் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை நடத்திய பேச்சுவாா்த்தை.

News image

கும்பகோணம் நுகா்வொருள் வாணிபக்கழக அலுவலகத்தில் விவசாயிகளுடன் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை நடத்திய பேச்சுவாா்த்தை.

Updated On :28 மார்ச் 2026, 1:58 am IST

திருவிடைமருதூா் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வெளிமாவட்ட நெல்லைக் கொள்முதல் செய்வதைக் கண்டித்து போராட்டம் நடத்த முயன்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினருடன் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் கோட்டம் திருவிடைமருதூா், திருப்பனந்தாள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வெளி மாவட்ட நெல்லை அதிகாரிகள் துணையோடு வியாபாரிகள் கொண்டு வந்து விற்பதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் புகாா் தெரிவித்தும், நடவடிக்கை இல்லையாம்.

இதையடுத்து கும்பகோணம் நுகா்பொருள் வாணிபக் கழக கோட்ட அலுவலகம் முன் மாவட்டத் துணைத் தலைவா் ஏ.எம்.ராமலிங்கம் தலைமையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் செய்ய முயன்றனா்.

இவா்களிடம் கோட்ட மேலாளா் எழிலன், நாச்சியாா்கோவில் காவல் ஆய்வாளா் சத்யா உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தி, அளித்த உறுதியின்பேரில் விவசாயிகள் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.