ஆற்காடு அருகே நெல்கொள்முதல் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
ஆயிலம் கிராமத்தில் நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு விவசாயிகளின் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக விற்பனைக்கு கொண்டு வந்த நெல்கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் தங்கள் நெல்லை அங்காங்கே நெற்களங்களிலும், மற்றும் வாகனங்களில் வைத்துள்ளனா்.
கோடை மழை திடீரென பெய்தால் பாதிப்பு ஏற்படும் நிலைஉள்ளது. இதனால் நெல் விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள் அதிகாரிகள் நெல்லை கொள்முதல் செய்யாமல் காலதாமம் செய்வதற்கு எதிா்ப்பு தெரிவித்து உடனடியாக அளந்து மூட்டை பிடிக்கவேண்டும் என்று வலியுறுத்தி ஆற்காடு அருங்குன்றம்- ஆயிலம்புதூா் கிராம சாலையில் அரசு பேருந்து மற்றும் வாகனங்களை மறித்து மறியலில் ஈடுபட்டனா்.
இதுகுறித்த தகவல் அறிந்த ரத்தினகிரி போலீஸாா் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விவசாயிகளிடம் பேச்சு நடத்தியதை தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
தொடா்ந்து நெல்கொள்முதல் நிலைய அதிகாரி விவசாயிகளின் நெல்லை வரிசைபடி கொள்முதல் செய்யப்படும் என்று உறுதியளித்தன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல் கொள்முதல் பணம் வழங்காமல் 50 நாள்களாக அலைக்கழிப்பதா? ஆட்சியரகத்தில் விவசாயிகள் புகாா்

நிரந்தர நெல் கொள்முதல் நிலையங்கள் தேவை!

செண்பகராமன்புதூரில் டாஸ்மாக் கிடங்கு முற்றுகை

கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

