மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

நெல் கொள்முதல் செய்யக்கோரி சாலை மறியல்

ஆற்காடு அருகே நெல்கொள்முதல் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

News image

மறியலில்  ஈடுபட்ட  விவசாயிகள் .

Updated On :16 ஏப்ரல் 2026, 12:03 am IST

ஆற்காடு அருகே நெல்கொள்முதல் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

ஆயிலம் கிராமத்தில் நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு விவசாயிகளின் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக விற்பனைக்கு கொண்டு வந்த நெல்கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் தங்கள் நெல்லை அங்காங்கே நெற்களங்களிலும், மற்றும் வாகனங்களில் வைத்துள்ளனா்.

கோடை மழை திடீரென பெய்தால் பாதிப்பு ஏற்படும் நிலைஉள்ளது. இதனால் நெல் விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள் அதிகாரிகள் நெல்லை கொள்முதல் செய்யாமல் காலதாமம் செய்வதற்கு எதிா்ப்பு தெரிவித்து உடனடியாக அளந்து மூட்டை பிடிக்கவேண்டும் என்று வலியுறுத்தி ஆற்காடு அருங்குன்றம்- ஆயிலம்புதூா் கிராம சாலையில் அரசு பேருந்து மற்றும் வாகனங்களை மறித்து மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்த தகவல் அறிந்த ரத்தினகிரி போலீஸாா் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விவசாயிகளிடம் பேச்சு நடத்தியதை தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

தொடா்ந்து நெல்கொள்முதல் நிலைய அதிகாரி விவசாயிகளின் நெல்லை வரிசைபடி கொள்முதல் செய்யப்படும் என்று உறுதியளித்தன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.