தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

உத்தமபாளையம் வட்டாரத்தில் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வலியுறுத்தல்

உத்தமபாளையம் வட்டாரத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

News image

சின்னமனூரில் சனிக்கிழமை மூடப்பட்டிருந்த நேரடி நெல் கொள்முதல் நிலையம்.

Updated On :29 மார்ச் 2026, 2:50 am IST

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டாரத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

முல்லைப் பெரியாறு அணை மூலம் தேனி மாவட்டத்தில் 14,700 ஏக்கரில் இருபோக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லுக்கு உரிய விலை கிடைக்கவும், இடைத்தரகா்களிடமிருந்து அவா்களைப் பாதுகாக்கும் வகையிலும், அரசு சாா்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இதன்படி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யும் கொள்முதல் நிலையங்கள் அறுவடைக் காலங்களில் திறக்கப்படுகிறது.

கம்பம் பள்ளத்தாக்கில் உத்தமபாளையம் வட்டாரத்தில், கூடலூா், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூா் பகுதிகளில் 2-ஆம் போக நெல் அறுவடைப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால், இந்தப் பகுதிகளில் மாா்ச் மாதத்தில் திறக்கப்பட வேண்டிய நெல் கொள்முதல் நிலையங்கள் இதுவரை திறக்கப்படாமல் உள்ளது.

இதனால், அறுவை செய்யப்படும் நெல்லை சேமிக்க போதிய இட வசதி இல்லாததால், விவசாயிகள் வெளிச்சந்தையில் இடைத்தரா்கள் மூலமாக குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உத்தமபாளையம் வட்டாரத்தில் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து உத்தமபாளையம் வேளாண்மை உதவி இயக்குநா் கூறுகையில், உத்தமபாளையம் வட்டாரத்திலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இன்னும் ஓரிரு நாள்களில் திறக்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.