தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கிய மழைநீா்: 5 ஆயிரம் மூட்டைகள் சேதம்

தேவபாண்டலம் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள மழை நீா்.

News image

தேவபாண்டலம் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள மழை நீா்.

Updated On :21 மார்ச் 2026, 1:50 am IST

தேவபாண்டலம் கிராமத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மேற்கூரை இல்லாததால் விவசாயிகள் கொண்டு வந்த நெல் குவியலில் தண்ணீா் புகுந்ததால் 5 ஆயிரம் மூட்டைகள் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடந்த இரு திணங்களாக இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது.

இதனால் சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் கிராமத்தில் அமைந்துள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்து குவித்து வைக்கப்பட்டிருந்த நெல்மணிகள் மற்றும் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் சுமாா் 5 ஆயிரம் நெல் மூட்டைக்கு மேல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் உடனடியாக மேல் கூரை அமைத்து, நெல் மூட்டைகளை பாதுகாத்திட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.