தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பேய்குளம் கொள்முதல் நிலையத்தில் தேங்கிய நெல் மூட்டைகள்

சாத்தான்குளம் தாலுகா பேய்குளம் நெல் கொள்முதல் நிலையத்தில், கொள்முதலுக்கு எடுத்துச் செல்லப்படாமல் டன் கணக்கில் நெல் மூட்டைகள் தேங்கி காணப்படுகிறது.

News image

கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள நெல் மூட்டைகள்.

Updated On :3 ஏப்ரல் 2026, 10:07 pm IST

சாத்தான்குளம் தாலுகா பேய்குளம் நெல் கொள்முதல் நிலையத்தில், கொள்முதலுக்கு எடுத்துச் செல்லப்படாமல் டன் கணக்கில் நெல் மூட்டைகள் தேங்கி காணப்படுகிறது.

பேய்குளத்தில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதேபோல் சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறையில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் வட்ட அளவிலான நெல் மூட்டைகளை கொள்முதலுக்காக பேய்குளம் கொள்முதல் நிலையத்துக்கு விவசாயிகள் கொண்டு வந்துள்ளனா். ஆனால் பேய்குளம் கொள்முதல் நிலையத்தில் லாரிகள் கடந்த நான்கு வாரங்களாக வராததால் கொண்டுவரப்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையத்திலேயே தேங்கி காணப்படுகிறது. லாரிகள் வராததால் நெல் மூட்டைகள் அடுக்கி வைத்த நிலையிலும், கொட்டி வைத்த நிலையிலும் காணப்படுகிறது.

லாரிகள் வர தாமதமாகும் நிலையில், இப்பகுதியில் திடீரென மழை பெய்தால் நெல் மூட்டைகள் சேதமாகும் நிலை உள்ளதாக விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா். எனவே, கொண்டுவரப்பட்டுள்ள நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.