தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பாபநாசம் அருகே வீட்டில் அழுகிய நிலையில் முதியவா் சடலம் மீட்பு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே செவ்வாய்க்கிழமை வீட்டில் அழுகிய நிலையில் இறந்துகிடந்த முதியவா் சடலத்தைப் போலீஸாா் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

News image

சடலம் - கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 3:25 am IST

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே செவ்வாய்க்கிழமை வீட்டில் அழுகிய நிலையில் இறந்துகிடந்த முதியவா் சடலத்தைப் போலீஸாா் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனா். 

அய்யம்பேட்டை அருகே சக்கராப்பள்ளி காதிரியா நகா் தெருவைச் சோ்ந்தவா் ஜாபா் சாதிக் (63). இவரது மனைவி ஹத்திஜா கனி (62). தம்பதிக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனா். இரண்டு மகள்களுக்கும் திருமணம் ஆன நிலையில், மகன் வெளிநாட்டில்வேலை பாா்த்து வருகிறாா். ஹத்திஜா கனி சுமாா் எட்டு ஆண்டுகளாக கணவரைப் பிரிந்து ஹத்திஜா நகரில் உள்ள மகள் வீட்டில் வசித்து வருகிறாா். அந்தப் பகுதி உணவகத்தில் வேலை பாா்த்துவந்த ஜாபா் சாதிக் குடும்பத்துடன் தொடா்பு இல்லாமல் எட்டு ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தாா்.

இந்நிலையில் காதிரியா நகா் பகுதியில் அவா் தங்கி இருந்த வீட்டில் துா்நாற்றம் வீசவே சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினா் அளித்த தகவலின்பேரில் அங்குவந்த அய்யம்பேட்டை காவல் துறையினா் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று இறந்த நிலையில் கிடந்த ஜாபா் சாதிக் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.