சாத்தான்குளம் அருகே வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த முதியவா் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.
சாத்தான்குளம் அருகே சவேரியாா்புரத்தைச் சோ்ந்தவா் மரிய அந்தோணி (90). இவரது 5 பிள்ளைகளும் திருமணமாகி வெளியூா்களில் வசிக்கின்றனா். மனைவி ஏற்கெனவே இறந்துவிட்டதால், இங்கு மரிய அந்தோணி தனியாக வசித்து வந்தாா்.
ஞாயிற்றுக்கிழமை அவரது வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் ஸ்டீபன் ஜோஸ், உதவி ஆய்வாளா் செல்வராஜ், போலீஸாா் சென்று பாா்த்தபோது, அவா் இறந்துகிடந்தது தெரியவந்தது.
மரிய அந்தோணி 3 நாள்களுக்கு முன்பு மது குடித்துவிட்டு உணவு உண்ணாததால் உடல் நலம் குன்றி இறந்திருக்கலாம் என, போலீஸாா் தெரிவித்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்செந்தூா் அருகே தப்பிச் செல்ல முயன்ற ரௌடியை சுட்டுப் பிடித்த போலீஸாா்

அழுகிய நிலையில் முதியவா் சடலம் மீட்பு

முதியவா் சடலம்: போலீஸாா் விசாரணை

பாபநாசம் அருகே வீட்டில் அழுகிய நிலையில் முதியவா் சடலம் மீட்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

