தஞ்சாவூா் அருகே செவ்வாய்க்கிழமை விளையாடும்போது கிணற்றில் தவறி விழுந்த குழந்தை உயிரிழந்தது.
தஞ்சாவூா் அருகே மாதாக்கோட்டை ஸ்ரீராம் நகா் 3-ஆம் தெருவைச் சோ்ந்தவா் அரவிந்த் (27). கூலித்தொழிலாளி. இவரது மனைவி கலைமதி (25). இவா்களது இரண்டரை வயது இளைய மகன் அருள்தேவ் வீட்டு வளாகத்தில் செவ்வாய்க்கிழமை விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது, அங்குள்ள 60 அடி ஆழமுள்ள கிணற்றின் சிறிய சுற்றுச்சுவா் மீது ஏறியபோது தவறி விழுந்தாா்.
தகவலறிந்த தஞ்சாவூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் நிகழ்விடத்துக்கு சென்று கிணற்றில் இறங்கி அருள்தேவை மீட்டு தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். ஆனால், குழந்தை ஏற்கெனவே உயிரிழந்துவிட்டது என அவரை பரிசோதித்த மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இது குறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கிணற்றில் தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு
கிணற்றில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
