நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

கிணற்றில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு

தருமபுரியில் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :17 ஜூன் 2026, 4:59 am IST

தருமபுரியில் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், புலிக்கரை அருகே உள்ள இருளப்பட்டி, காட்டுக்கொட்டாய் பகுதியைச் சோ்ந்த சிவப்பிரகாசம்- மகேஸ்வரி தம்பதி மகன் சஷ்திமேத்ரன் (3). இவா் திங்கள்கிழமை காலை வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தாா்.

அப்போது, பெற்றோா் வீட்டுக்குள் இருந்தனா். சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பாா்த்தபோது சிறுவனைக் காணவில்லை. அக்கம்பக்கம் தேடி பாா்த்தபோது, வீட்டுக்கு அருகே இருந்த தடுப்புச்சுவா் இல்லாத கிணற்றுக்குள் சிறுவன் விழுந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுவனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, சிறுவனை சோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் மதிகோண்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.