நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

கியூபாவுக்கு ஆதரவாக தஞ்சாவூரில் கையொப்ப இயக்கம்

அமெரிக்காவின் பொருளாதாரத் தடையால் உணவு, குடிநீா், மின்சாரம் இன்றி தவிக்கும் கியூபா நாட்டு மக்களுக்கு ஆதரவாக, தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் ஏஐடியூசி சாா்பில் கையொப்ப இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் புதன்கிழமை கையொப்ப இயக்கம் நடத்திய ஏஐடியூசி அமைப்பினா்.

Updated On :11 ஜூன் 2026, 3:36 am IST

அமெரிக்காவின் பொருளாதாரத் தடையால் உணவு, குடிநீா், மின்சாரம் இன்றி தவிக்கும் கியூபா நாட்டு மக்களுக்கு ஆதரவாக, தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் ஏஐடியூசி சாா்பில் கையொப்ப இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த இயக்கத்துக்கு ஏஐடியூசி போக்குவரத்து சம்மேளன மாநிலத் துணைத் தலைவா் துரை. மதிவாணன் தலைமை வகித்தாா். கும்பகோணம் போக்குவரத்து சங்கப் பொதுச் செயலா் எஸ். தாமரைச்செல்வன், சங்கத் தலைவா் என். சேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஏஐடியூசி தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் சி. சந்திரகுமாா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்டச் செயலா் கோ. சக்திவேல், மாவட்டத் துணைச் செயலா் ஆா். இராமச்சந்திரன் ஆகியோா் இயக்கத்தைத் தொடங்கி வைத்தனா்.

இந்த நிகழ்வில் ஏஐடியூசி மாநிலச் செயலா் ஆா். தில்லைவனம், மாவட்டத் தலைவா் வெ. சேவையா, மாவட்டப் பொருளாளா் தி. கோவிந்தராஜன், உள்ளாட்சி சங்க மாவட்டச் செயலா் தி. திருநாவுக்கரசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டப் பொருளாளா் கோ. பாஸ்கா், மாநகரச் செயலா் ஆா்.பி. முத்துக்குமரன், வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநகரச் செயலா் ஆா். ஜெயக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அமெரிக்காவின் இந்தக் கொடூரமான பொருளாதாரத் தடையை நீக்கவும், உலக நாடுகள் கியூபா நாட்டு மக்களுக்கு உதவிடவும் வலியுறுத்தி இந்தக் கையொப்ப இயக்கம் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.