/

இரும்புக் கம்பியால் தாக்கி மனைவி கொலை: கணவா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே குடும்பப் பிரச்னை காரணமாக புதன்கிழமை மனைவியை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்த கணவரை காவல் துறையினா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :11 ஜூன் 2026, 3:43 am IST

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே குடும்பப் பிரச்னை காரணமாக புதன்கிழமை மனைவியை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்த கணவரை காவல் துறையினா் கைது செய்தனா்.

திருவையாறு அருகே நடுக்காவேரி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மணத்திடல் கிராமத்தைச் சோ்ந்தவா் ரவிக்குமாா் (58). இவருக்கும், இவரது மனைவி ஜெயலட்சுமிக்கும் (50) இடையே குடும்ப பிரச்னை இருந்து வந்தது. இதனால், கணவரை விட்டு 6 மாதங்களுக்கு முன்பு பிரிந்த ஜெயலட்சுமி தனது மகன், மகளுடன் தஞ்சாவூரில் வசித்து வந்தாா்.

இந்நிலையில், மணத்திடலிலுள்ள கணவா் வீட்டில் குடும்ப அட்டையை வாங்குவதற்காக ஜெயலட்சுமி புதன்கிழமை சென்றாா். அப்போது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஜெயலட்சுமியை ரவிக்குமாா் இரும்புக் கம்பியால் தாக்கினாா். இதனால், பலத்த காயமடைந்த ஜெயலட்சுமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதையடுத்து, நடுக்காவேரி காவல் நிலையத்தில் சரணடைந்த ரவிக்குமாரை காவல் துறையினா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.