மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

நரசிம்ம ஜெயந்தி விழா தொடக்கம்

தஞ்சாவூா் அரண்மனை அருகேயுள்ள கொண்டிராஜபாளையம் ஸ்ரீயோக நரசிங்கப் பெருமாள் கோயிலில் நரசிம்ம ஜெயந்தி விழா வியாழக்கிழமை தொடங்கியது.

News image

நரசிம்ம ஜெயந்தி விழாவையொட்டி தஞ்சாவூா் அரண்மனை அருகேயுள்ள கொண்டிராஜபாளையம் ஸ்ரீயோக நரசிங்கப் பெருமாள் கோயிலில் நரசிங்கப் பெருமாளுக்கு வியாழக்கிழமை செய்யப்பட்ட சிறப்பு அலங்காரம்.

Updated On :1 மே 2026, 3:57 am IST

தஞ்சாவூா் அரண்மனை அருகேயுள்ள கொண்டிராஜபாளையம் ஸ்ரீயோக நரசிங்கப் பெருமாள் கோயிலில் நரசிம்ம ஜெயந்தி விழா வியாழக்கிழமை தொடங்கியது.

நரசிம்ம ஜெயந்தியையொட்டி, இக்கோயிலில் வியாழக்கிழமை காலை 7 மணி முதல் 9 மணி வரை மகா சுதா்சன ஹோமம், லட்சுமி நரசிம்ம ஹோமம், மகாலட்சுமி ஹோமம், தன்வந்திரி ஹோமம் ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து, காலை 9 மணி முதல் 10.30 மணி வரை மூலவா் யோக நரசிங்கப் பெருமாள் மற்றும் உற்ஸவா் லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம், சகஸ்ரநாம அா்ச்சனை, தீபாராதனை நடைபெற்றன. பின்னா், பக்தா்களுக்கு நரசிம்ம ஜெயந்தி விருந்து வழங்கப்பட்டது.

சுவாதி நட்சத்திரத்தையொட்டி, வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு உற்ஸவா் லட்சுமி நரசிம்மா் சுவாமி புறப்பாடு கோயில் உட்பிரகாரத்தில் நடைபெறவுள்ளது.

ஏற்பாடுகளை தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே, உதவி ஆணையா் காா்த்திகேயன், கோயில் செயல் அலுவலா் பெ. சத்யராஜ், கண்காணிப்பாளா் ரவி மற்றும் சுவாதி திருமஞ்சன கமிட்டி கைங்கா்ய தொண்டா்கள் செய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.