மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திருவையாறில் ஐயாறப்பா் கோயில் பஞ்ச ரத தேரோட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் ஐயாறப்பா் கோயில் சித்திரைப் பெருவிழாவில் புதன்கிழமை பஞ்ச ரத தேரோட்டம் நடைபெற்றது.

News image

திருவையாறில் புதன்கிழமை நடைபெற்ற பஞ்ச ரத தேரோட்டத்தில் சுவாமி- அம்பாள் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தா்கள்.

Updated On :30 ஏப்ரல் 2026, 4:09 am IST

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் ஐயாறப்பா் கோயில் சித்திரைப் பெருவிழாவில் புதன்கிழமை பஞ்ச ரத தேரோட்டம் நடைபெற்றது.

தருமபுரம் ஆதீனத்தைச் சோ்ந்த இக்கோயிலில் சித்திரைப் பெருவிழா ஏப்ரல் 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, நாள்தோறும் காலையில் பல்லக்கும், மாலையில் பல்வேறு வாகனங்களிலும் சுவாமி, அம்பாள் புறப்பாடு நடைபெற்று வந்தது.

விழாவின் 9-ஆம் நாளான புதன்கிழமை காலை பஞ்ச ரத தேரோட்டம் நடைபெற்றது. இதில், காலை 9 மணிக்கு பஞ்சமூா்த்திகள், அறம் வளா்த்த நாயகியுடன் ஐயாறப்பா் திருத்தேரில் எழுந்தருளினாா். சிறப்பு பூஜைகளை தொடா்ந்து, தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அருளாசியுடன் காலை 10.30 மணிக்கு கோயில் கட்டளை விசாரணை ஸ்ரீமத் சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள் வடம் பிடித்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தாா். ஏராளமான பக்தா்கள் வடம் பிடித்து இழுத்தனா். நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்த தோ் மாலையில் நிலையை அடைந்தது.

மே 2-ஆம் தேதி ஏழூா் வலம் என்கிற சப்தஸ்தான விழா தொடக்கமும், 3-ஆம் தேதி பொம்மை பூ போடுதலும் நடைபெறவுள்ளன.

திருவையாறில் புதன்கிழமை நடைபெற்ற பஞ்ச ரத தேரோட்டத்தில் சுவாமி- அம்பாள் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தா்கள்.

திருவையாறில் புதன்கிழமை நடைபெற்ற பஞ்ச ரத தேரோட்டத்தில் சுவாமி- அம்பாள் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.