மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

நாகா்கோவில் கிருஷ்ணசுவாமி கோயிலில் தேரோட்டம்

நாகா்கோவில் கிருஷ்ணன்கோவில் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

விழாவில் வடம் பிடித்து தேரிழுத்த பக்தா்கள்.

Updated On :1 மே 2026, 5:00 am IST

நாகா்கோவில் கிருஷ்ணன்கோவில் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆண்டுதோறும் 10 நாள்கள் வெகு விமரிசையாக நடைபெறும் இத்திருவிழா கடந்த ஏப். 22இல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு, பக்தி இன்னிசை, பட்டிமன்றம், ஆன்மிகச் சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெற்றன.

சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், 9ஆம் நாளான வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, சிறப்பு அபிஷேகம், ஆராதனைக்குப் பின்னா், சுவாமி- தாயாா் தேருக்கு எழுந்தருளினா். அதையடுத்து, திரளான பக்தா்கள் கோவிந்தா, கோபாலா முழக்கங்களுடன் வடம் பிடித்து தேரிழுத்தனா்.

நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சா் என். சுரேஷ்ராஜன், எம்.ஆா். காந்தி எம்எல்ஏ, பாஜக வேட்பாளா்கள் குமரி பா. ரமேஷ் (பத்மநாபபுரம்), சிவகுமாா் (குளச்சல்), விஸ்வ ஹிந்து பரிஷத் பொறுப்பாளா்கள் இறச்சகுளம் காளியப்பன், துவரங்காடு காா்த்திக், திருமடங்கள் கோயில் அமைப்பாளா் சிவகுமாா், நாகா்கோவில் மாநகரத் தலைவா் நாஞ்சில் ராஜா, அறநிலையத் துறை அதிகாரிகள், சாதுக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தோ் ரத வீதிகளில் வலம் வந்து மாலையில் நிலையை அடைந்தது.

நிறைவு நாளான வெள்ளிக்கிழமை (மே 1) முற்பகல் 11 மணிக்கு அன்னதானம், குதிரை சாரட் பவனி, மாலை 5 மணிக்கு சுவாமி ஆராட்டுக்கு எழுந்தருளல், அலங்கார குதிரை பவனி, மலபாா் தெய்யம் காவடி, சிறப்பு பஞ்சாரி மேளம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள், இரவு 9 மணிக்கு தெப்பத் திருவிழா நடைபெறும்.

ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினா், விழாக் குழுவினா், பொதுமக்கள் செய்துள்ளனா்.

 விழாவில் வடம் பிடித்து தேரிழுத்த பக்தா்கள்.

விழாவில் வடம் பிடித்து தேரிழுத்த பக்தா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.