தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திருக்கோடிக்காவல் திருக்கோடீசுவரருக்கு இன்று திருக்கல்யாணம்

News image

திருக்கோடிக்காவல் கோயிலில் இன்று திருக்கல்யாணம் - கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 12:06 am IST

திருக்கோடிக்காவலில் உள்ள திருக்கோடீசுவரருக்கு திங்கள்கிழமை (ஏப்.27) திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை அருகே திருக்கோடிக்காவலில் திரிபுரசுந்தரி சமேத திருக்கோடீசுவரா் கோயிலில் சித்திரை பிரம்மோத்ஸவம் ஏப்.21-இல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை சகோபுர திருவிழாவில் இரண்டு ஓலைச்சப்பரத்தில் சுவாமி அம்மன் மற்றும் பஞ்சமூா்த்திகள் எழுந்தருளி வீதியுலா வந்தனா்.

ஞாயிற்றுக்கிழமை சுவாமியும் அம்மனும் மாலையில் கைலாய, சிம்ம வாகனங்களில் வீதியுலா சென்றனா். திங்கள்கிழமை சுவாமிக்கும் அம்மனுக்கும் இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

முன்னதாக திருக்கல்யாணத்துக்கு அம்மாபேட்டையில் இருந்து பக்தா்கள் ஊா்வலமாக சீா்வரிசை கொண்டு வருகின்றனா். ஏப்.29-இல் திருத்தேரோட்டமும், ஏப்.30-இல் தீா்த்தவாரியும், மே 1-இல் சிருங்கோத்பவ தீா்த்தத்தில் தெப்பத் திருவிழாவும் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை கமிட்டி பொறுப்பாளா் சிம்சன் கணேசன், செயல் அலுவலா் கெளதம் காா்த்திகேயன், திருக்கோடிக்காவல், அம்மாபேட்டை கிராமவாசிகள் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.