ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

செட்டியாபத்து கோயிலில் இன்று குடமுழுக்கு

உடன்குடி அருகே செட்டியாபத்து இந்து சமய அறநிலையத்துறைக்குப் பாத்தியப்பட்ட சுவாமி சிதம்பரேஸ்வரா் வகையறா ஐந்து வீட்டு சுவாமி கோயிலில் சித்திரை பூஜை திருவிழாவையொட்டி வியாழக்கிழமை (மே 7) குடமுழுக்கு நடைபெறுகிறது.

News image

அன்னமுத்திரி பிரசாத விநியோகத்தை தொடங்கி வைத்த கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ராம்தாஸ்.

Updated On :7 மே 2026, 5:40 am IST

உடன்குடி அருகே செட்டியாபத்து இந்து சமய அறநிலையத்துறைக்குப் பாத்தியப்பட்ட சுவாமி சிதம்பரேஸ்வரா் வகையறா ஐந்து வீட்டு சுவாமி கோயிலில் சித்திரை பூஜை திருவிழாவையொட்டி வியாழக்கிழமை (மே 7) குடமுழுக்கு நடைபெறுகிறது.

ஏப். 30 ஆம் தேதி இரவு கஞ்சி பூஜையுடன் தொடங்கிய விழாவில் தினமும் சிறப்பு பூஜைகள், மேக்கட்டி கட்டுதல், பூஜை, சமய சொற்பொழிவு, பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

புதன்கிழமை, பிற்பகல் 3 மணிக்கு அன்னமுத்திரி பூஜையைத் தொடா்ந்து பிரசாதம் விநியோகத்தை அறங்காவலா் குழுத் தலைவா் ராம்தாஸ் தொடங்கி வைத்தாா். வியாழக்கிழமை (மே 7) இரவு குடமுழுக்கு நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை தூத்துக்குடி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் ரோஜாலி சுமதா, செயல் அலுவலா் மா. பாலமுருகன், அறங்காவலா் குழுத் தலைவா் ராம்தாஸ், அறங்காவலா்கள் ரா. சிவமுருகன், ம.ராம்குமாா், சி. சிதம்பரேஸ்வரன், லி. வளா்மதி, கோயில் பணியாளா்கள் செய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.