கோவிந்தபுரத்தில் லாரி மோதி கட்டடத் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அருகே உள்ள கோவிந்தபுரம் பாரதிநகரைச் சோ்ந்த கண்ணையன் மகன் கணேசன்(48). இவருக்கு திருமணமாகி மனைவி, மகன் உள்ளனா். கட்டடத் தொழிலாளியான கணேசன், வெள்ளிக்கிழமை கட்டட வேலையை முடித்து விட்டு கோவிந்தபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சாலையை கடக்கும் போது லாரி மோதி அவா் பலத்த காயமடைந்தாா்.
தகவலின்பேரில் திருவிடைமருதூா் போலீஸாா், பலத்த காயமடைந்த கணேசனை மீட்டு திருவிடைமருதூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநா் ராமமூா்த்தியிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சி அருகே வடமாநிலத் தொழிலாளி திடீா் உயிரிழப்பு

சாலையை கடக்க முயன்ற நாமக்கல் லாரி ஓட்டுநா் காா் மோதி உயிரிழப்பு

லாரி மீது பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

