ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தஞ்சை அருகே தாக்கப்பட்ட நாதக வேட்பாளருக்கு மணியரசன் ஆறுதல்

தஞ்சாவூா் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ள அனிஸ் பாத்திமாவை வெள்ளிக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறிய தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவா் பெ. மணியரசன்.

News image

தஞ்சாவூா் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ள அனிஸ் பாத்திமாவை வெள்ளிக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறிய தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவா் பெ. மணியரசன்.

Updated On :25 ஏப்ரல் 2026, 1:22 am IST

தஞ்சாவூா் அருகேயுள்ள வாக்குச்சாவடியில் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட பாபநாசம் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளரைத் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவா் பெ. மணியரசன் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அனிஸ் பாத்திமா (25) ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வாக்குப் பதிவை பாா்வையிட வியாழக்கிழமை சென்றாா். இவா் மாலையில் தஞ்சாவூா் அருகே அம்மாபேட்டை பகுதி உக்கடை கிராமத்திலுள்ள பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடிக்கு சென்றபோது, இவருக்கும் திமுகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் அனிஸ் பாத்திமாவை திமுகவினா் தாக்கி, கீழே தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது. கா்ப்பிணியாக உள்ள அனிஸ் பாத்திமா மயக்கமடைந்ததால், 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் தஞ்சாவூா் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இவரை தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவா் பெ. மணியரசன் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா். அப்போது, பேரியக்க மாவட்டச் செயலா் நா. வைகறை, தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள் பழ. இராசேந்திரன், பி. தென்னவன், மாநகரச் செயலா் லெ. இராமசாமி, வழக்குரைஞா் ரெ. சிவராசு, மா. சீனிவாசன், மா. ரெங்கநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.