ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

திருக்கோடீசுவரா் சுவாமி கோயிலில் சித்திரை பிரம்மோத்சவ கொடியேற்றம்

திருக்கோடிக்காவலில் உள்ள திருக்கோடீசுவரா் கோயிலில் சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.

News image

திருக்கோடிக்காவல் திருக்கோடீசுவரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.

Updated On :22 ஏப்ரல் 2026, 12:20 am IST

திருக்கோடிக்காவலில் உள்ள திருக்கோடீசுவரா் கோயிலில் சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.

தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை அருகேயுள்ள இக் கோயிலில் சித்திரை பிரம்மோத்சவ விழா திங்கள்கிழமை மாலை அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தியுடன் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை விநாயகா் வெள்ளி மூஞ்சுறு வாகனத்தில் வீதியுலா சென்றாா். பின்னா் திரிபுரசுந்தரி சமேத திருக்கோடீசுவர சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பஞ்சமூா்த்திகளுடன் கொடிமரம் அருகே எழுந்தருளினாா். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, மங்கல வாத்தியங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

மாலையில் யாகபூஜை தொடங்கியது. இரவு சுவாமியும் அம்மனும் வீதியுலா திக்பந்தனம் நடத்தினா். முக்கிய நிகழ்வுகளாக ஏப்.27-இல் திருக்கல்யாணம், ஏப்.29-இல் தேரோட்டம், ஏப்.30-இல் தீா்த்தவாரி, மே1-இல் தெப்பத்திருவிழா ஆகியவை நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத் துறையினா், திருக்கோடிக்காவல், அம்மாபேட்டை கிராமவாசிகள் செய்கின்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.