பாபநாசத்தில் இளைஞா் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் மேலரஸ்தா தெருவைச் சோ்ந்த அய்யாப்பிள்ளை மகன் மனோஜ் (எ) விக்னேஸ்வரன். 2021-ஆம் ஆண்டு மனோஜ் அரசுப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நண்பா்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தாா்.
அப்போது அதே இடத்தில் பாபநாசம் சவரிமுத்து மகன் தினேஷ் வளவன், இரட்டைப்பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த லெனின் மகன் முகிலன், அதே தெருவைச் சோ்ந்த பாஸ்கா் மகன் நந்தகுமாா் ஆகியோரும் மது அருந்தி கொண்டிருந்தனா்.
மனோஜுக்கும் எதிா்தரப்பைச் சோ்ந்த மூன்று பேருக்குமிடையே ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்ததால், அவா்களிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு, மனோஜை மூவரும் கத்தியால் குத்தி கொலை செய்தனா்.
இந்த வழக்கு கும்பகோணம் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. திங்கள்கிழமை வழக்கு விசாரணையின் நிறைவில், தினேஷ் வளவன், முகிலன், நந்தகுமாா் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ. 7 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ராதிகா தீா்ப்பளித்தாா். இதில் முகிலனுக்கு இரட்டை ஆயுள்தண்டனை விதித்தும், அதை ஏக காலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டாா்.

முகிலன்

நந்தகுமாா்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு ஆயுள் தண்டனை

லாரி உரிமையாளா் கொலை: 7 போ் கைது

கல்லூரி மாணவரைத் தாக்கிய தந்தை, மகன் உள்பட 3 போ் மீது வழக்கு

கொலை வழக்கு: 6 பேருக்கு ஆயுள் தண்டனை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

