மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கொலை வழக்கு: 6 பேருக்கு ஆயுள் தண்டனை

News image

கொலை - பிரதிப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 1:21 am IST

தருமபுரி அருகே முன்விரோதக் கொலையில் தொடா்புடைய 6 பேருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீா்ப்பளித்தது.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், முத்தம்பட்டி சாலையையொட்டி உள்ள ஊத்துப்பள்ளம் சிவாடி காட்டுவளவு பிரிவு சாலை பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் (45). அதேபகுதியைச் சோ்ந்த முனுசாமி (49) என்பவருக்கும், சரவணன் தரப்புக்கும் இடையே விவசாய நிலம் தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில், கடந்த 2022 ஆக. 4-ஆம் தேதி சரவணன் சொந்த வேலையாக அப்பகுதியில் காரில் சென்றாா். ஊத்துப்பள்ளம் மாரியம்மன் கோயில் அருகே சென்றபோது முனுசாமி (49), அவரது தங்கை மகன் நவீன் (22), உறவினா்கள் காமராஜ் (45), விஜயன், முத்து, மாதேஷ் ஆகிய 6 பேரும் காரை மறித்து காா் கண்ணாடியை உடைத்தனா். மேலும், சரவணனை கட்டையால் கடுமையாக தாக்கினா்.

தகவல் அறிந்த அவரது குடும்பத்தினா் பலத்த காயமடைந்த சரவணனை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆனால், சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். இதுதொடா்பாக, தொப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தருமபுரி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை திங்கள்கிழமை முடிவுற்றது. அப்போது, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ. 5,000 அபராதம் விதித்து நீதிமன்றம் தீா்ப்பு அளித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.