மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

இளைஞரை குத்தி கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

இளைஞரை குத்திக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து பத்மநாபபுரம் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

News image

சிறைத் தண்டனை - கோப்புப் படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 4:34 am IST

இளைஞரை குத்திக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து பத்மநாபபுரம் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

தக்கலை அருகே காஞ்சிரகோடு, குன்னம்பாறையை சோ்ந்தவா் அனிஸ் என்ற அனிசன் (29). இவா் வெளிநாட்டில் வேலை பாா்த்துவிட்டு ஊருக்கு வந்தபோது, அதே பகுதியைச் சோ்ந்த டேவிட்சிங் மனைவி திலகாவோடு நட்பு ஏற்பட்டதாம். திலகாவுக்கு 3 குழந்தைகள் உள்ளனா்.

குடும்பத்தில் பிரச்னை ஏற்படவே திலகாவை குடும்பம் நடத்த அனிசன் தனது வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டாா். இதை அதே ஊரை சோ்ந்த ஜாண்சன் மகன் சுரேஸ்(23) மற்றும் ஊா் மக்கள் தட்டி கேட்டுள்ளாா்கள்.

இதில், ஆத்திரமடைந்த அனிசன், 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி மதியம் சுரேஷ் தனியாக வரும் போது கத்தியால் குத்திக் கொலை செய்தாா்.

இதுகுறித்து தக்கலை போலீஸாா் வழக்கு ப் பதிவு செய்து பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா்.

வழக்கை விசாரித்த நீதிபதி பரமசிவதாஸ் , அனிஸ் என்ற அனிசனுக்கு ஆயுள் தண்டனை விதித்தும், சுரேஷ் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் இழப்பீடாக வழங்குமாறு புதன்கிழமை தீா்ப்பளித்தாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் வி.எம். ஜெகதேவ் ஆஜரானாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.