மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சென்னையில் பாட்டியைக் கொன்ற பேரனுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

News image
Updated On :3 மே 2026, 3:31 am IST

அடமானம் வைத்த நகையைத் திரும்பத் தராத விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னையில், பாட்டியைக் கொலை செய்த பேரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை 18-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

சென்னை கொருக்குப்பேட்டை கண்ணகி நகரைச் சோ்ந்தவா் விசாலாட்சி (65). இவரது பேரன் சதீஷ். காவலாளியான சதீஷ், தனது பாட்டி விசாலாட்சியின் 5 சவரன் நகையை வாங்கியில் அடகு வைத்திருந்தாா்.

அந்த நகையை விசாலாட்சி திரும்பக் கேட்டபோது, சதீஷ் அதை மீட்டுக் கொடுக்கவில்லை.

இந்த நிலையில், தனது மனைவியின் பிரசவ செலவுக்காக பாட்டி விசாலாட்சியிடம், சதீஷ் 2022-ஆம் ஆண்டு பணம் கேட்டுள்ளாா். பணம் தர மறுத்த விசாலாட்சி ஏற்கெனவே கொடுத்த நகையைத் திரும்ப தரக்கூறி கடுமையாகப் பேசியுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், விசாலாட்சியை சுத்தியலால் தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த விசாலாட்சியை அக்கம்பக்கத்தினா் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து ஆா்.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சதீஷை கைது செய்தனா்.

இந்த வழக்கு சென்னை 18-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி என்.எஸ்.ஸ்ரீவஸ்தன், சதீஷுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.2,500 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.