/

பேராவூரணியில் திமுக சாா்பில் மத்திய அரசின் தொகுதி மறுவரை மசோதா நகல் எரிப்பு போராட்டம்

தஞ்சாவூா் மாவட்டம் பேராவூரணி பெரியாா் சிலை அருகில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொகுதி மறுவரை மசோதா நகல் எரிப்பு போராட்டம் திமுக சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

பேராவூரணியில் வியாழக்கிழமை நடைபெற்ற மத்திய அரசின் தொகுதி மறுவரை மசோதா நகல் எரிப்பு போராட்டம் .

Updated On :17 ஏப்ரல் 2026, 2:08 am IST

தஞ்சாவூா் மாவட்டம் பேராவூரணி பெரியாா் சிலை அருகில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொகுதி மறுவரை மசோதா நகல் எரிப்பு  போராட்டம் திமுக சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசின் தொகுதி மறுவரை  மசோதா மூலம் எம்பி  தொகுதிகள் எண்ணிக்கை 543 லிருந்து  850 ஆக உயரும் என்றும், தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் 59  ஆக உயா்வதோடு,  உத்தரப்பிரதேசத்தில்  80 லிருந்து 120 ஆக உயரும் என கூறப்படுகிறது .இதனால் தென் மாநில பிரதிநிதித்துவம் குறைவதோடு,இந்தி பேசும் 10 வட மாநிலங்களின்  தொகுதிகள் எண்ணிக்கை 340 ஆக அதிகரிக்கும். மொத்தம் 850 ல்  தனிப்பெரும்பான்மைக்கு 408 தேவை. அதில் 83 சதம்  வடமாநிலங்களே தீா்மானிக்கும் நிலை வரும் என்பதால் மத்திய அரசின் தொகுதி மறுவரை மசோதாவிற்கு  முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கடும் எதிா்ப்பு தெரிவித்தோடு ‘தீ பரவட்டும்‘ என  ல தளத்தில் பதிவிட்டுள்ளாா். இதையடுத்து பேராவூரணி தொகுதியில் திமுக வினா் மசோதா நகல் எரிப்பு மற்றும் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடத்தினா். பேராவூரணி பெரியாா் சிலை அருகில் நடைபெற்ற மசோதா நகல் எரிப்பு போராட்டத்தில் திமுக மாவட்ட பொருப்பாளா் டி.பழனிவேல் , ஒன்றியச் செயலாளா்கள் க.அன்பழகன் ,மு.கி.முத்துமாணிக்கம் , குழ.செ.அருள்நம்பி , வை.ரவிச்சந்திரன் , ஞானப்பிரகாசம் , பொதுக்குழு உறுப்பினா் அ.அப்துல் மஜீத்  உள்ளிட்டோா் கலந்து கொண்டனா் .

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.