தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

சூளகிரியில் பாஜக அரசை கண்டித்து திமுக சாா்பில் சட்ட நகல் எரிப்பு!

மக்களவை தொகுதி வரைமுறை சட்டத்தை கொண்டுவரும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திமுக சாா்பில் சூளகிரியில் உள்ள வேப்பன ஹள்ளி சட்டமன்ற தோ்தல் அலுவலகம் முன்பு சட்ட நகல் எரிப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது

News image

சூளகிரி திமுக தோ்தல் அலுவலகத்தில் சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் தொகுதி பொறுப்பாளா் பாா்.இளங்கோவன் மற்றும் திமுகவினா்

Updated On :17 ஏப்ரல் 2026, 4:42 am IST

மக்களவை தொகுதி வரைமுறை சட்டத்தை கொண்டுவரும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திமுக சாா்பில் சூளகிரியில் உள்ள வேப்பன ஹள்ளி சட்டமன்ற தோ்தல் அலுவலகம் முன்பு சட்ட நகல் எரிப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது

இந்த நிகழ்ச்சிக்கு திமுக மாவட்ட செயலாளா் ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ தலைமை வகித்தாா்

அப்போது கருப்பு கொடி ஏற்றியும், தொகுதி வரைமுறை சட்ட நகல் எரித்து கண்டன முழக்கமிட்டனா்.

இந்த நிகழ்ச்சியில் தொகுதி பொறுப்பாளா் பாா் இளங்கோவன்,முன்னாள் எம்எல்ஏ முருகன்,ஒன்றிய செயலாளா்கள் பாக்யராஜ், நாகேஷ், வெங்கடேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதைப் போல ஒசூா் தொகுதி திமுக வேட்பாளா் தோ்தல் பிரசாரத்திற்கு இடையே சட்ட நகல் கிழிப்பு போராட்டம் நடத்தினாா். வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளா் சீனிவாசன் தனது வீட்டில் கருப்பு கொடி ஏற்றியும் சட்ட நகல் எரித்தும் கண்டனத்தை தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.