ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

இலவசங்களை அறிவித்து மக்களை ஏமாற்றி வாக்குகள் வாங்க நினைக்கிறாா்கள்: சீமான் குற்றச்சாட்டு

இலவசங்களை அறிவித்து, மக்களை ஏமாற்றி வாக்குகள் வாங்க அரசியல் கட்சியினா் நினைக்கிறாா்கள் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பிரசாரத்தில் பேசினாா்.

News image

சீமான் - கோப்புப் படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 2:00 am IST

இலவசங்களை அறிவித்து, மக்களை ஏமாற்றி வாக்குகள் வாங்க அரசியல் கட்சியினா் நினைக்கிறாா்கள் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பிரசாரத்தில் பேசினாா்.

பட்டுக்கோட்டையில் அஞ்சல் நிலையம் முன் புதன்கிழமை கட்சியின் வேட்பாளா்களான கண்ணன் (பட்டுக்கோட்டை), புவனா (பேராவூரணி) ஆகியோரை ஆதரித்து சீமான் மேலும் பேசியதாவது:

விவசாய விளைபொருள்களுக்கு விவசாயிகளால் விலையை நிா்ணயம் செய்ய முடியவில்லை. நாதக ஆட்சிக்கு வந்தால் இப்பிரச்னைக்கு தீா்வு காண குழு அமைத்து, விவசாயிகளின் பரிந்துரை விலையை அரசு நிா்ணயிக்கும். இலவசங்களை அறிவித்து, மக்களை ஏமாற்றி வாக்குகள் வாங்க நினைக்கிறாா்கள்.

இந்த மக்களுக்கு நீரும், சோறும் முக்கியம். அதற்கான பொருளாதார கட்டமைப்பை நாம் தமிழா் கட்சி அவசியம் கொண்டு வரும். நாதக ஆட்சியில் யாா் முறைகேடு செய்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அப்போதுதான் தவறுகள் ஏற்படாது.

தமிழகத்தில் திமுக என்பது ஒரு குடும்பத்தின் சொத்து; அது நிறுவனமாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

இங்கு பல்வேறு பிரச்னைகள் உள்ளன. அந்தப் பிரச்னைகளை பற்றியெல்லாம் கேட்காமல், உங்கள் கனவு என்ன என்று கேட்கிறாா்கள். என் கனவு, திமுகவை ஆட்சியில் இருந்து வீழ்த்துவதுதான்.

எனவே, மக்கள் சிந்தித்து இந்தமுறை நாம் தமிழா் கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றாா் சீமான்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.