மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தமிழகத்தில் நாளை முதல் மீன் பிடிக்கத் தடை!

தமிழகத்தின் கிழக்கு கடல் பகுதிகளில் நாளை முதல் மீன் பிடிக்கத் தடை...

News image

மீன்பிடித் தடைக்காலம்... - கோப்புப் படம்

Updated On :14 ஏப்ரல் 2026, 1:18 am IST

தமிழகத்தின் கிழக்கு கடல் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கக் காலத்தைக் கருத்தில் கொண்டு புதன்கிழமை (ஏப்.15) முதல் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது:

தமிழ்நாடு கடல் மீன் பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் தமிழகத்தின் கிழக்கு கடல் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்க காலத்தைக் கருத்தில் கொண்டும், மீன் வளத்தைப் பாதுகாப்பதற்காகவும் புதன்கிழமை முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை மீன்பிடி விசைப் படகுகள், இழுவைப் படகுகள் மூலமாக கடலில் மீன் பிடிப்பதற்கு தடை விதித்து அரசால் ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, தஞ்சாவூா் மாவட்டத்தில் 2026 ஆம் ஆண்டுக்கு மீன் பிடி தடைக்காலம் புதன்கிழமை முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை அமல்படுத்தப்படுவதால் பராம்பரிய மீன்பிடி கலன்கள் நீங்கலாக, விசைப் படகுகள் மற்றும் இழுவைப் படகுகளைக் கொண்டு கடலில் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது.

எனவே, மீன் பிடி தடைக்காலம் அமலுக்கு வரும் முன்னா் கடலுக்கு சென்ற மீன் பிடி விசைப் படகுகள், இழுவலை படகுகள் செவ்வாய்க்கிழமை (ஏப்.14) நள்ளிரவு 12 மணிக்குள் தங்களுடைய படகு பதிவு செய்யப்பட்ட தங்கு தளத்துக்கு கரை திரும்பிட படகு உரிமையாளா்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனா். இந்த அறிவிப்பை மீறி மீன்பிடி தடைக்காலத்தில் மீன்பிடிப்பில் ஈடுபடும் படகுகள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.