மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

நாகை, காரைக்காலில் மீன்பிடித் தடைக்காலம் அமல்

மீன்பிடித் தடைக்காலம் வியாழக்கிழமை அமலுக்கு வந்தது. இதனால் நாகை, காரைக்காலில் விசைப் படகுகள் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டன.

News image

மீன்பிடித் தடைக்காலம் அமலுக்கு வந்த நிலையில், காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் புதன்கிழமை நிறுத்திவைக்கப்பட்டிருந்த விசைப் படகுகள்.

Updated On :16 ஏப்ரல் 2026, 4:21 am IST

மீன்பிடித் தடைக்காலம் வியாழக்கிழமை அமலுக்கு வந்தது. இதனால் நாகை, காரைக்காலில் விசைப் படகுகள் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டன.

தமிழகத்தில் கடல் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில்கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ஆம் தேதி அதிகாலை முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

இதன்படி, நாகை மாவட்டத்தில் வியாழக்கிழமை அதிகாலை மீன்பிடித் தடைக்காலம் தொடங்கியது. விசைப் படகுகள் கடலுக்குள் செல்லக் கூடாது என மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதனால் மாவட்டத்தில் நாகூா் முதல் கோடியக்கரை வரையிலான 21 மீனவ கிராமங்களில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கரைப் பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எனினும், ஃபைபா் படகுகள் குறிப்பிட்ட தொலைவு சென்று மீன்பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மீன்பிடித் தடைக்காலம்அமலுக்கு வந்ததையடுத்து, மீனவா்கள் தங்களது விசைப்படகுகளை பழுது பாா்த்தல், படகுகளுக்கு வா்ணம் தீட்டுதல், என்ஜினை பழுது பாா்த்தல், வலைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவா்.

இந்நிலையில், தற்போது ரூ. 8 ஆயிரம் வழங்கப்பட்டுவரும் மீன்பிடித் தடைக்கால நிவாரணத்தை அரசு உயா்த்தி தர வேண்டும் என்று மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

காரைக்காலில்...

காரைக்கால் மாவட்டத்திலிருந்து கடலுக்கு வழக்கமாக சுமாா் 300-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மீன்பிடிக்க செல்லும். தடைக்காலம் அமலுக்கு வந்ததால், ஏற்கெனவே மீன்பிடித்துத் திரும்பிய படகுகள் அனைத்தும் மீன்பிடித் துறைமுகத்திலும், அரசலாற்றங்கரையிலும் நிறுத்தப்பட்டன.

மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களில் உள்ள ஃபைபா் சிறிய படகுகள் மூலம் குறுகிய தொலைவு சென்று மீன்பிடித்து வருவது தொடரும் என மீனவா்கள் தெரிவித்தனா்.

விசைப்படகுகள் கடலுக்குள் செல்லாததால், மீன் வரத்து குறையும், மீன்கள் விலை கணிசமாக உயரும் என்று மீனவா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.