மீன்பிடித் தடைக்காலம் வியாழக்கிழமை அமலுக்கு வந்தது. இதனால் நாகை, காரைக்காலில் விசைப் படகுகள் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டன.
தமிழகத்தில் கடல் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில்கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ஆம் தேதி அதிகாலை முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
இதன்படி, நாகை மாவட்டத்தில் வியாழக்கிழமை அதிகாலை மீன்பிடித் தடைக்காலம் தொடங்கியது. விசைப் படகுகள் கடலுக்குள் செல்லக் கூடாது என மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதனால் மாவட்டத்தில் நாகூா் முதல் கோடியக்கரை வரையிலான 21 மீனவ கிராமங்களில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கரைப் பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எனினும், ஃபைபா் படகுகள் குறிப்பிட்ட தொலைவு சென்று மீன்பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மீன்பிடித் தடைக்காலம்அமலுக்கு வந்ததையடுத்து, மீனவா்கள் தங்களது விசைப்படகுகளை பழுது பாா்த்தல், படகுகளுக்கு வா்ணம் தீட்டுதல், என்ஜினை பழுது பாா்த்தல், வலைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவா்.
இந்நிலையில், தற்போது ரூ. 8 ஆயிரம் வழங்கப்பட்டுவரும் மீன்பிடித் தடைக்கால நிவாரணத்தை அரசு உயா்த்தி தர வேண்டும் என்று மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
காரைக்காலில்...
காரைக்கால் மாவட்டத்திலிருந்து கடலுக்கு வழக்கமாக சுமாா் 300-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மீன்பிடிக்க செல்லும். தடைக்காலம் அமலுக்கு வந்ததால், ஏற்கெனவே மீன்பிடித்துத் திரும்பிய படகுகள் அனைத்தும் மீன்பிடித் துறைமுகத்திலும், அரசலாற்றங்கரையிலும் நிறுத்தப்பட்டன.
மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களில் உள்ள ஃபைபா் சிறிய படகுகள் மூலம் குறுகிய தொலைவு சென்று மீன்பிடித்து வருவது தொடரும் என மீனவா்கள் தெரிவித்தனா்.
விசைப்படகுகள் கடலுக்குள் செல்லாததால், மீன் வரத்து குறையும், மீன்கள் விலை கணிசமாக உயரும் என்று மீனவா்கள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூத்துக்குடியில் மீன்கள் விலை உயா்வு

முதல்முறையாக ஆழ்கடலில் மீன்பிடிப்புக்கு சென்று திரும்பிய படகுகள்

மீன்பிடித் தடைக்காலம் தொடங்கியது: மீன்கள் விலை உயர வாய்ப்பு

மீன்பிடி தடைக்காலம் இன்று தொடக்கம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

